குலசை முத்தாரமே நீங்காது நின் நினைவு !
குலசை முத்தாரமே! நீங்காது நின் நினைவு !! சி . தனபால் , நிலை- 1 நிர்வாக அலுவலர் (ஓய்வு) . இந்து சமய அறநிலையத் துறை ‘ பருப்பத வேந்தன் பெற்ற பார்வதி தேவி நின்றன் திருப்பணி செய்து வாழ திருவருள் புரிதல் வேண்டும் விருப்புடன் பணியும் அன்பர் வேண்டிடும் செல்வம் நல்கும் அருட்திரு குலசை முத்தார அம்மையே போற்றி ! போற்றி !’ அறிமுக உரை. செந்தில் ஆண்டவனின் அருள் மணம் கமழும் புனித மண்ணைத் தொட்டுத் தழுவும் ஆசையில், கடல் அலைகள் கரையை நோக்கி தவழ்ந்து வந்த உச்சிப் பொழுது வேளையில், தொலை தூரத்தில் கோவில்